சட்டமன்ற தேர்தல் பிரச்சாரங்கள் மிகவும் பரபரப்பாக நடந்து வருகிறது. ஒருபுறம் பறக்கும் படையினர் இரவு பகலாக செயல்பட்டு கணக்கில் வராத பணத்தை கைப்பற்றி வருகின்றனர்.இந்நிலையில் திருப்பூரில் இன்று ரூ.570 கோடி முறையான டாக்குமெண்டுக்கள் இல்லாமல் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதுகுறித்து நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில், இந்த 570 கோடி ரூபாயை வைத்து ஏராளமான குழந்தைகளுக்கு தேவையான கல்வி, உணவு ஆகியவற்றை பூர்த்தி செய்யலாம் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
570 cr seized in Tirupur without documents???
.wish they use it for children education n mid day meal scheme.wil b enuf for 570cr kids
— Vishal (@VishalKOfficial) May 14, 2016