பல நடிகைகள் அஜித் படத்தில் கதாநாயகியாகவோ அல்லது முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரிலோ நடித்து விட வேண்டும் என்று கடுமையாக முயற்சி எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது அஜித்தில் 57வது படத்தை சிவா இயக்கும் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார். அப்படத்தில் இரண்டு நாயகிகள் இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானதை அடுத்து தென்னிந்திய சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகைகளும் போட்டா போட்டியில் இறங்கினர். அவர்களில் கீர்த்தி சுரேசும் ஒருவர்.
ரஜினி முருகன் ஹிட்டுக்குப்பிறகு தற்போது விஜய்யின் 60-வது படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், இந்த நேரத்தில் அஜித் படத்தில் நடிக்க முயற்சி எடுத்தால் ஒர்க்அவுட்டாக நிறைய வாய்ப்பு இருக்கிறது என்பதால் தீவிரமான முயற்சி எடுத்து வந்தார். ஆனால், அந்த படம் சம்பந்தமாக டைரக்டர் சிவாவை சந்திக்க அவர் அப்பாய்ண்மென்ட் கேட்டபோது அவர் பிசியாக இருப்பதாக சொல்லி சொல்லி இழுத்தடித்து விட்டார்களாம். அதனால் ஒருகட்டத்தில் அந்த முயற்சியில் இருந்து பின்வாங்கி விட்டாராம் கீர்த்தி சுரேஷ்.