![tsunami-in-pacific-northwest]()
![tsunami-in-pacific-northwest]()
பல்லாயிரம் உயிர்களைப் பலிகொண்ட சுனாமிக்கு நாளையுடன் 11 வருடங்களாகின்றன.
மறைந்து போன உறவுகளை நினைவு கூறும் முகமாக நாளை காலை 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நாளை காலை 09.25 முதல் 09.27 வரையான இரண்டு நிமிடங்களுக்கு மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மறைந்த போன உறவுகளுக்கு ஆசி வேண்டி 25 மாவட்டங்களிலும் விசேட நிகழ்வுகளை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளதோடு தெளிவூட்டும் நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி இடம்பெற்ற சுனாமி பேரனர்த்தத்தில் இலங்கையில் 35000ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.