![Suriya1]()
![Suriya-fans-chennai-floods]()
கடந்த ஒரு வாரமாக சென்னை மற்றும் கடலூர் போன்ற மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை தற்போது பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. தெரு முழுவதும் வெள்ளம் சூழ்ந்திருந்ததால் பலர் வீட்டிலேயே முடங்கி இருந்தனர். பலர் தங்குவதற்கு இடமின்றி தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் இருந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் பல்வேறு வகையில் வந்து சேர்ந்த வண்ணம் உள்ளது. இதற்கிடையில் கோவை மாவட்டத்தை சேர்ந்த சூர்யாவின் ரசிகர்கள், சூர்யா நற்பணி மன்றம் சார்பில் ரூ. 50 ஆயிரம் பணத்தை நிதியுதவியாக வழங்கியுள்ளனர். மேலும் ரசிகர் மன்றம் சார்பாக மழை நிற்பதற்கு வர்ணபகவானை வேண்டி சிறப்பு யாகம் ஒன்றும் நடத்தியுள்ளனர்.