வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட மாகாண கண்காட்சி இன்று யாழ்.நீராவியடி இலங்கைவேந்தன் கலைக்கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் காலை 11 மணிக்கு செய்வோம் செய்விப்போம் என்ற கருப்பொருளில் நடைபெற்ற இக் கண்காட்சியில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் கலந்துகொண்டு நிகழ்வை தொடங்கிவைத்தார்.
↧