Quantcast
Channel: 123Cine News
Viewing all articles
Browse latest Browse all 1703

சூர்யா- கெளதம்மேனன் மீண்டும் இணைவார்களா?

$
0
0

அஜீத் நடித்த என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு சிம்புவின் அச்சம் என்பது மடமையடா, தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களை இயக்கி வருகிறார் கெளதம்மேனன். இதில் சிம்பு படம் முடியும் தருவாயில் உள்ளது. ஆனால் தனுஷ் படம் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது. அவரும் கொடி படத்தை முடித்து விட்டதால் இந்த பட வேலைகளில் முழுவீச்சில் இறங்கியிருக்கிறார்.

இந்த படத்தை இயக்கி முடித்ததும் தற்போது தெறி, கபாலி படங்களை தயாரித்துள்ள எஸ்.தாணு தயாரிப்பில் ஒரு மெகா படத்தை இயக்குகிறாராம் கெளதம் மேனன். அந்த படத்தில் ஹீரோவாக நடிக்கப்போவது யார் என்பது இன்னும் முடிவாகவில்லையாம். அதேசமயம், எஸ்.தாணு தயாரிப்பில் காக்க காக்க படத்தில் இணைந்த சூர்யா-கெளதம்மேனன் கூட்டணி இந்த படத்தில் மீண்டும் இணைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், காக்க காக்க, வாரணம் ஆயிரம் படங்களுக்குப்பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்கயிருந்தார் சூர்யா. ஆனால் கதை விசயத்தில் அவர்களுக்கிடையே ஏற்பட்ட குழப்பத்தினால் அந்த படத்தில் இருந்து விலகி அஞ்சானில் கமிட்டானார் சூர்யா. அதையடுத்து அஜீத்தை வைத்து என்னை அறிந்தால் படத்தை இயக்க சென்றார் கெளதம்மேன்ன. இப்படி அவர்கள் இருவரும் ஒரு படத்தில் இணைந்து பிரிந்தபோதிலும் அவர்களுக்கிடையிலான நட்பு எப்போதும் போலவே தொடர்ந்து வருகிறது. அதனால் அவர்கள் மீண்டும் இணைவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறுகிறார்கள்.


Viewing all articles
Browse latest Browse all 1703

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்