கடந்த ஆண்டு தனி ஒருவன், ரோமியோ ஜூலியட், சகலகலா வல்லவன், பூலோகம் என நான்கு வெற்றி படங்களை கொடுத்தார் ஜெயம் ரவி. மேலும் இந்த ஆண்டு ஜெயம் ரவி நடித்த மிருதன்’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அவர் தற்போது ‘போகன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஜெயம் ரவியின் 25வது படம் மிக விரைவில் தொடங்கவுள்ளதாகவும், இந்த படத்தை அவரது சகோதரர் ஜெயம் ராஜா இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படம் இருவரும் இணைந்து கடந்த ஆண்டு உருவாக்கிய ‘தனி ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகம் என்ற தகவலும் தற்போது வெளிவந்துள்ளது.
நேற்று ஜெயம் ராஜா தனது டுவிட்டரில் ரசிகர்களிடம் கலந்துரையாடியபோது இதை தெரிவித்துள்ளார். தற்போது அவர் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பஹத் பாசில் நடிக்கவுள்ள ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.