ஓ காதல் கண்மணி படத்திற்கு பிறகு மணிரத்னம் அடுத்து கார்த்தியை வைத்து ஒரு புதிய படம் இயக்க இருப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி இருந்தது.காதல் மற்றும் கேங்ஸ்டர் படமாக உருவாகயிருக்கும் இப்படத்திற்கு குருதி பூக்கள் என்று தலைப்பு வைத்துள்ளனர்.
இப்படத்தை மணிரத்னம் இயக்குவதோடு அவரே தயாரிக்கவும் செய்கிறார். ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கான பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வலைதளங்களில் பரவி வருகிறது. ஆனால் இப்பட பெயரும், போஸ்டரும் அதிகாரப்பூர்வமானதா என்பது தெரியவில்லை.