யாவரும் நலம், மனம் படங்களை தொடர்ந்து இயக்குனர் விக்ரம் குமார் சூர்யாவை வைத்து 24 எனும் சயின்ஸ் பிக்ஷன் படத்தை இயக்கியுள்ளார். நடிகர் சூர்யா இப்படத்தில் முதல்முறையாக மூன்று வேடங்களிலும் ஐந்து கெட்டப்பிலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இப்பட வெளியீட்டுக்கு முன்பே இதன் இரண்டாம் பாகத்திற்கான கதையை இயக்குனர் விக்ரம் குமார் தயார் செய்து வைத்துள்ளாராம். 24 படத்துக்கு கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க அவர் திட்டமிட்டுள்ளார்.