திரையுலகில் ஜாம்பவான்கள் என்று கருதப்படும் ரஜினியும் கமலும் கூட அரை நாள் வரை இருந்து பார்த்து உற்சாகப்படுத்திய (கமல் மாலையிலும் வந்தார்) நட்சத்திரக் கிரிக்கெட் நிகழ்ச்சிக்கு, ஊரிலிருந்தும்கூட வராமல் தவிர்த்த விஜய், அஜீத் மீது ஏக வருத்தம் திரையுலகினருக்கு.
நடிகர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில்,
அஜித்,விஜய் இருவரும் ஈகோ பார்க்கிறார்கள் என்பது மட்டும் தெள்ளத் தெளிவாகிவிட்டது. இப்போது நடிகர் சங்க நிர்வாகத்தில் இருப்பவர்கள் இளைஞர்கள்.மிக ஆர்வத்துடன் சங்கத்துக்காக உழைக்கிறார்கள். இதன் பலன் பல நலிந்த கலைஞர்களுக்குத்தான் கிடைக்கப் போகிறது. அவர்களும் மக்கள்தானே…
ஆனால் அஜீத்தும் விஜய்யும் விஷாலுக்கு முக்கியத்துவம் கிடைத்துவிடும் என்று நினைத்து புறக்கணிக்கிறார்கள். தங்கள் ஈகோவைத் திருப்திப்படுத்த நடிகர் சங்கத்தை அவமதிக்கிறார்கள் இந்த இரு நடிகர்களும்.
விஜய்யை பல முறை அழைத்தோம். முயற்சி செய்கிறேன் என்று மட்டும் சொன்னார். ஆனால் அஜீத்தோ அழைப்பிதழையே வாங்கவில்லை தெரியுமா?’ என்று கோபப்பட்டார் நடிகர் சங்க நிர்வாகி ஒருவர்.