ரெமோ படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், ‘தனி ஒருவன்’ ராஜா இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இப்படத்தில் பிரபல மலையாள ஸ்டார் ஃபஹத் ஃபாசிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் ரெமோ படத்தை தொடர்ந்து இந்த படத்துக்கும் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரான அனிருத் இசையமைப்பார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சிவகார்த்திகேயன் – அனிருத் கூட்டணி ஆறாவது முறையாக இணையவிருக்கிறது. மேலும் ரெமோ படத்தின் பாடல்கள் தேர்தலுக்கு பிறகு வெளிவரும் எனவும் சொல்லப்படுகிறது.