மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘ஒரு வடக்கன் செல்பி’ படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் மஞ்சிமா மோகன். இவர் தமிழில் சிம்பு ஜோடியாக கௌதம் இயக்கும் அச்சம் என்பது மடமையடா படத்தில் அறிமுகமாகிறார்.
முதல் படத்திலேயே சிம்பு ஜோடியாக நடித்த அனுபவம் குறித்து பேசிய அவர், “சிம்பு எந்தவொரு காட்சியாக இருந்தாலும் அதை சிங்கிள் டேக்கில் முடித்துவிடுவார். எனவே அவருடன் நடிக்கும்போது அதீத கவனம் தேவை. இதற்காகவே அவருடன் நடிக்கும் காட்சிகளை நான் ஸ்பெஷலாக ஒத்திகை பார்ப்பேன்” என கூறியுள்ளார்.