![IMG_7913.jpg]()
![IMG_7913.jpg]()
முன்னிலை சோசலிஷ கட்சியின் செயலாளர் கடத்தப்பட்டமை குறித்து முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு எதிராக புதிய வழக்கொன்று பதிவு செய்யப்படவுள்ளதாக முன்னிலை சோசலிஷ கட்சி தெரிவித்துள்ளது.
2012 ஆம் ஆண்டு ஏப்ரல் 6ம் திகதி முன்னிலை சோசலிஷ கட்சியின் தலைவர் குமார் குணரத்னம் மற்றும் அக்கட்சியின் உறுப்பினரான திமுது ஆட்டிகல ஆகியோரை கடத்திச் சென்றமையை பகிரங்கமாகவே வார இறுதிநாளிதழ் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போது கோத்தபாய தெரிவித்திருந்தார்.
இதனை அடிப்படையாக வைத்து அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக முன்னிலை சோசலிஷ கட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து முறைபாடு செய்வதற்காக முன்னிலை சோசலிஷ கட்சியின் அரசியல் குழு உறுப்பினரான துமிந்த நாகமுவ இன்று பொலிஸ் தலைமையகத்திற்கு சென்றுள்ளதாகவும் அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.