கோலிவுட்டில் 10 ஆண்டுகளாக முன்னணி நாயகியாக வளம் வருபவர் நயன்தாரா. 30 வயதுக்கு மேல் ஆகிவிட்ட நிலையிலும், ஆரி, விஜய் சேதுபதி என இளம் நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.இனி அஜித், விஜய் படங்களில் நயன்தாரா நடிக்க போவதில்லை என்று கூறப்படுகிறது. இளம் நடிகர்களுடன் நடிக்கும் போது அந்த படத்தின் கதை தன்னுடைய வேடத்தை சுற்றி வருவதுடன், படத்தின் புரொமோஷன்களில் நயன்தாரா படம் என்றே கூறப்படுகிறது.
ஆனால் அஜித், விஜய் போன்றோருடன் நடித்தால் நாயகிகளின் பெயர் காணாமல் போய்விடுகிறதாம்.இதனால் நயன்தாரா இனி முன்னணி நடிகர்களின் படங்களில் நடிப்பதில்லை என்று முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.