‘கோலிசோடா’, ‘பத்து எண்றதுக்குள்ள’ ஆகிய படங்களை தொடர்ந்து விஜய் மில்டன், தேவயானியின் கணவர் ராஜகுமாரனை ஹீரோவாக வைத்து ‘கடுகு’ என்ற படத்தை தொடங்கியுள்ளார். இந்த படத்தில் பரத் வில்லனாக நடிக்கப்போவதாக கூறப்பட்டது. இப்படத்தின் நாயகியாக ராதிகா பிரசித்தா நடிக்கவுள்ளார். இவர் ‘குற்றம் கடிதல்’ படத்தில் ஹீரோயினாக நடித்தவர்.
இப்படத்தில் ராஜகுமாரன் புலி வேஷ கலைஞராக நடிப்பது அனைவருக்கும் தெரிந்ததே. தற்போது இப்படத்தில் பரத் பாக்சராக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் மாதவன் பாக்சராக நடித்து வெளிவந்த ‘இறுதிச்சுற்று’ படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அதைத் தொடர்ந்து பரத்தும் இந்த படத்தில் பாக்சராக நடிப்பது படத்திற்கு பெரிய பலமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை ரஃப் நோட் புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இன்னும் சில தினங்களுக்குள் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.