பாகுபலி 2 படத்தை முடித்த கையோடு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி, மீண்டும் ஒரு சரித்திர படத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம். இப்படத்தை ரூ. 200 கோடி பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக தயாரிக்க ஒரு தெலுங்கு தயாரிப்பாளர் முன்வந்துள்ளாராம்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் இருந்தும் சூப்பர்ஸ்டார்கள் இப்படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர். இதில் தமிழில் இருந்து விஜய் நடிப்பார் என கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இப்படத்தை தெலுங்கில் மட்டுமே அதுவும் தெலுங்கு நடிகர்களை மட்டுமே வைத்து இயக்க ராஜமௌலி முடிவு செய்துள்ளாராம். எனினும் விஜய்யுடன் அவர் வேறொரு படத்தில் இணைவார் என சொல்லப்படுகிறது.