சூர்யா எப்போதும் தன்னை பற்றி பேசுபவர்களை கண்டுக்கொள்ளவே மாட்டார். அதனால், தான் இவர் இன்று இத்தனை உயரத்தை அடைந்துள்ளார்.இந்நிலையில் சமீபத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில் இவர் டக் அவுட் ஆனார், இதுக்குறித்து சமூக வலைத்தளங்களில் பல கிண்டல் கருத்து எழுந்துள்ளது.ஆனால், சூர்யாவோ அதையும் பாசிட்டிவாக்கி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இதில் குறிப்பாக ‘ஒரு விளையாட்டு வீரன் நல்ல நடிகனாக இருக்க அவசியமில்லை, ஒரு நடிகன் நல்ல விளையாட்டு வீரனாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. டக் அவுட்ஸ், தவறவிடப்பட்ட கேட்சுகள், வைடுகள், நோ பால்கள், சிக்ஸ், மற்றும் ஃபோர் என அனைத்தும் இருந்தன. ஆனால் ஒற்றுமை, நல்ல எண்ணம், நெகிழ்ச்சி ஆகியன பிரதானமாக இருந்தது’ என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.