வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணைகிறது. ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ சார்பாக டி.ஜி.தியாகராஜன் இப்படத்தை தயாரிக்கவுள்ளார்.
இதன் படப்பிடிப்பு ஜூனில் தொடங்குகிறது. இந்நிலையில் இப்படத்தின் எடிட்டராக பிரவீன் ஒப்பந்தமாகியிருப்பதாக சில தினங்களாக இணையத்தில் பேசப்பட்டு வந்தது. ஆனால் எடிட்டர் பிரவீன் தற்போது இத்தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.